Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று! - சொல்கிறார் வாரியார்

Go down

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று! - சொல்கிறார் வாரியார் Empty குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று! - சொல்கிறார் வாரியார்

Post by abirami Sat Mar 21, 2015 9:01 pm

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று! - சொல்கிறார் வாரியார் Large_103058775


* உடலுக்குத் தலை முக்கியமானது. அதில் சிறந்த உறுப்பான கண்ணில் கருணை நிறைந்து விட்டால் அதைவிடச் சிறப்பு வேறில்லை.
* சூரியன் பகலிலும், சந்திரன் இரவிலும் உலகிற்கு ஒளியூட்டுவது போல, நல்ல குணமுள்ள பிள்ளைகள் பிறந்த குடியை விளங்கச் செய்கிறார்கள். அதனால் தான் அவர்கள் தெய்வத்துக்கு ஒப்பிடப்படுகிறார்கள்.
* ஆயிரக்கணக்கில் ஆபரணங்கள் இருந்தாலும், சொன்ன வாக்கை காப்பாற்றுவதே சிறந்த ஆபரணமாகும்.
* குழந்தை போல கபடமற்ற மனம் படைத்தவர்கள் பக்தியின் மூலம் கடவுளைத் தரிசிக்கும் பேறு பெறுகிறார்கள்.
* எண்ணத்தைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது. அதனால், மனதில் எப்போதும் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.
* நிழல் எப்போதும் நம்மைப் பின் தொடர்வது போல, செய்த செயலின் பலனும் ஒருவனைப் பின்தொடரும்.
* நல்ல நூல்களைத் தினமும் படியுங்கள். இதனால், அறிவும், ஆற்றலும் விசாலமடைகின்றன.
* பொன்னையும், பொருளையும் கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. சத்தியம், தர்மம் போன்ற நற்பண்புகளையே எதிர்பார்க்கிறார்.
* உண்மையைக் காட்டிலும் சிறந்த தர்மம் இல்லை. பொய்யைக் காட்டிலும் கொடிய அதர்மம் இல்லை.
* பிறர் குற்றம் பொறுப்பது மனிதத்தன்மை. அதை மன்னித்து மறப்பது தெய்வத்தன்மை.
* சிரித்த முகம், இனிய சொல், நேர் கொண்ட பார்வை இவையே நல்ல மனிதனின் அடையாளம்.
* நல்ல செயல்களில் ஈடுபடும் போது பாவம் செய்ய நேரிட்டாலும் அதனால், பாதிப்பு ஏதும் உண்டாகாது.
* படிப்பினால் உண்டாகும் அறிவை விட, அனுபவத்தில் கிடைக்கும் அறிவு பன்மடங்கு மேலானது.
* நல்லவர்களின் நட்பைத் தேடிச் சென்றாவது பெற முயலுங்கள். அப்போது தான் உங்கள் வாழ்வில் வளர்ச்சிக் காலம் வந்து விட்டதாக அர்த்தம்.
* நல்லவர்கள் நல்வாழ்வு பெறுவது திண்ணம். அவர்களின் புகழை மூவுலகிற்கும் தெரியப்படுத்துவது கடவுளின் பணியாகும்.
* கோபம் வரும் சமயத்தில் கண்ணாடியில் முகத்தைக் கொஞ்சம் பாருங்கள். வெட்கத்தினால் கோபம் மாறி சாந்த குணம் வந்து விடும்.
* உழைக்காமல் கிடைக்கும் நெய் அன்னத்தை விட, சுயமுயற்சியால் கிடைக்கும் தண்ணீரும், சோறும் மேலானது.
* ஏழைகளுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். அவர்களின் சிரிப்பில் கடவுளையே நீங்கள் காணமுடியும்.
* பாவத்தைப் பிறரிடம் கூறி வருந்துவதால் அதன் தீவிரம் குறையத் தொடங்கும்.
* எல்லா உயிர்களுமே கோயிலுக்கு சமம் தான். அதனால், அனைவரையும் கடவுளாக மதியுங்கள்.
* "இல்லை' என மறுக்கும் நாத்திகன் மீதும் அன்பு காட்டுபவராக கடவுள் இருக்கிறார்.
* விலங்குகளில் இருந்து மனிதன் உயர்ந்து நிற்பது தெய்வ உணர்ச்சி ஒன்றினால் தான்.
* கடவுள் நமக்கு எது செய்தாலும் அது அருள் தான். சிலசமயம் துன்பம் போல தோன்றுவது நம் அறியாமையால் தான்.
* செய்த செயல்களின் பலனே அடுத்த பிறவியில் பாவபுண்ணியமாக ஒருவரைச் சேர்கிறது.


abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum