Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா!

Go down

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா! Empty உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா!

Post by abirami Sat Mar 21, 2015 7:30 pm

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா! Large_123142755

* எதையும் அறியாதவன் தான், விவாதம் செய்வதில் விருப்பம் காட்டுகிறான். மனப்பக்குவத்தை அடைந்தவனோ அமைதியைக் கடைபிடிக்கிறான்.
* வீடு கட்டும் வரை தான் சாரம் தேவைப்படுகிறது. அதுபோலவே, பக்தியிலும் விக்ரக ஆராதனை ஆரம்ப காலத்தில் மட்டுமே தேவைப்படும்.
* ஊரெங்கும் தேடினாலும் கடவுளை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. அவர் உன் உள்ளத்திலேயே குடிகொண்டிருக்கிறார்.
* மனிதனே! உனது உள்ளத்திற்குள் ஆயிரம் ஆசைகள் குவிந்து கிடக்கலாம். ஆனால், அதையெல்லாம் மீறி உன் மனதை அடக்கி வைத்தால் தான் நீ வலிமை பெற்ற வீரனாக விளங்குவாய்.
* பிறருடைய குறையைப் பற்றிப் பேசுபவன் காலத்தை வீணாக்குகிறான். முதலில் அவன் தன்னிடமுள்ள குறைகளைத் திருத்திக்
கொள்வதே நல்லது.
* உன்னுடைய மத நம்பிக்கையில் ஆழ்ந்த பற்று கொண்டிரு. அதற்காக மற்றவர்கள் மீது சிறிதும் வெறுப்பு காட்டாதே.
* விடாமுயற்சியும், கடின உழைப்பும் கொண்டவனுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால், முயற்சியற்றவனுக்கு ஒன்றும் கிடைக்காது.
* மனதை அடக்கக் கற்றுக் கொள். அதன் பின் துன்பத்தைக் கண்டு கலங்கத் தேவையிருக்காது.
* பழுத்த மரம் எப்போதும் தாழ்ந்து வளைந்து நிற்கும். அதைப் போலவே, நீயும் பணிவோடு இருக்கக் கற்றுக் கொள்.
* அரிய மனிதப்பிறவியை பயன்படுத்திக் கொள். இப்போது கடவுளை அறியாவிட்டால், இனி இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது.
* பணத்திற்கு ஒருபோதும் அடிமையாகாதே. நற்குணங்கள் கொண்டவனே மனிதர்களில் சிறந்தவன்.
* ஆணவத்தை விட்டு விடு. "நான்' என்ற எண்ணம் சிறிதும் வேண்டாம். பற்றில்லாமல் செயலில் ஈடுபடுவதே சிறந்தது.
* புலன்களை வென்றவனால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இருக்காது. அவனே மனிதர்களில் சிறந்தவன்.
* முதலில் கடவுளைத் தேடு. அதன் பின் உலக வாழ்வில் ஈடுபடு. அப்போது தான் மனச் சஞ்சலம் உண்டாகாது.
* கோபம் கொள்பவன் நல்லது, கெட்டதைப் பகுத்தறியும் திறனை இழந்து விடுகிறான்.
* எப்போதும் எச்சரிக்கையுடன் இரு. தீய எண்ணம் மனதில் நுழைய சிறிதும் இடம் கொடுப்பது கூடாது.
* முதலில் உள்ளமாகிய கோயிலில் கடவுளை பிரதிஷ்டை செய்து, நல்ல எண்ணத்தால் அவருக்கு அபிஷேகம் நடத்து.
* அவதார புருஷர்களை வணங்குவது கடவுளை வழிபடுவதற்குச் சமமானது.
* எத்தனை ஆபத்து குறுக்கிட்டாலும் ஞானிகளின் மனம் சிறிதும் கலக்கம் அடைவதில்லை.
* கடவுளை நம்புவது போல, அவருடைய திருநாமங்கள் மீதும் தீவிர நம்பிக்கை கொள்வது அவசியம்.
* கடவுளின் அருள் இல்லாமல் மனிதன் அறியாமையைப் போக்கிக் கொள்ள முடியாது.
* கள்ளம் கபடம் அற்ற எளிய மனிதர்கள் கடவுளை எளிதில் அடையும் பேறு பெறுகிறார்கள்.
* படிப்பதை விடக் கேள்வி ஞானம் உயர்ந்தது. கேட்பதை விட நேரில் காண்பது இன்னும் சிறந்தது.
* குடும்ப கடமையைச் சரிவர செய்து கொண்டிரு. ஆனால், மனம் எப்போதும் கடவுளின் திருவடியைச் சிந்திக்கட்டும்.
* ஆன்மிகத்தில் முன்னேற விரும்புபவனுக்கு பொறுமை மிகவும் அவசியம். பொறுமைசாலிக்கு எந்தக் காலத்திலும் அழிவு உண்டாகாது.

சொல்கிறார் குருதேவர்
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum