Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பேஸ்புக் காதலால் ஏமாந்த சென்னை ஆணழகன்: பொலிசில் புகார்

Go down

சென்னை - பேஸ்புக் காதலால் ஏமாந்த சென்னை ஆணழகன்: பொலிசில் புகார் Empty பேஸ்புக் காதலால் ஏமாந்த சென்னை ஆணழகன்: பொலிசில் புகார்

Post by oviya Wed Feb 18, 2015 1:43 pm

பேஸ்புக் மூலம் காதல் செய்து தன்னை ஒரு பெண் ஏமாற்றிவிட்டதாக சென்னை ஆணழகன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை ஆணழகனாக தெரிவு செய்யப்பட்ட கார்த்திகேயன், தற்போது உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

இவர் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில் பேஸ்புக் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. கணனி அறிவியல் படித்திருந்த அந்தப் பெண், அப்போது பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

எங்களது பழக்கத்தால் விரைவில் காதலிக்கத் தொடங்கினோம்.

இந்நிலையில் அவருக்கு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்ததால், அங்கிருந்து இங்கு வந்து ஒரு விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார்.

அந்த பெண் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதால், எங்கள் குடும்பத்தினருக்கும் அந்த பெண்ணைப் பிடித்திருந்தது.

ஆனால், அவளது வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என அந்தப் பெண் கூறியதால் நானும், அந்தப் பெண்ணும் போரூரில் உள்ள கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம்.

அதன் பின்னர் நாங்கள் கணவர்- மனைவி போல வாழ்ந்து வந்தோம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் சென்ற அந்தப் பெண் அதன் பின் திரும்பி வரவில்லை.

அவரை கைப்பேசியில் கூட தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. திடீரென அண்மையில் தொடர்பு கொண்ட அந்தப் பெண், தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும், என்னைப் பிடிக்கவில்லை எனவும் கூறிவிட்டார்.

உடனே நான் அவரைச் சந்திக்க அந்த பெண்ணின் சொந்த ஊருக்குச் சென்றபோது, அவரது குடும்பத்தினர் என்னை மிரட்டி அனுப்பி விட்டனர்.

மேலும் என்னைக் காதலிப்பதாக கூறி அந்த பெண் பல லட்சம் ரூபாய் என்னிடம் மோசடி செய்துள்ளார். இப்போது வேறு 3 இளைஞர்களையும் தனது வலையில் விழ வைப்பதற்காக அந்தப் பெண் முயற்சித்து வருகிறார்.

அதனால் அந்தப் பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum